Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, March 29, 2013

சிறுகதை - கனவில் வந்த கண்கண்ட தெய்வம்



அன்னை இலக்கியம் - மலர்ந்த ஜீவியம் Nov -2000


கனவில் வந்த கண்கண்ட தெய்வம்
                                                -   S. அன்னபூரணி

"His soul was free and given to her alone" என்று பகவான் எழுதிய சாவித்ரியில் "The Adoration of the Divine Mother" என்ற முக்கியமான அத்தியாயத்தில் கடைசி வரியைப் படித்து முடித்து அன்னையை வணங்கிய ரகுநாதனை வாசல் "காலிங் பெல்'' சத்தம் அழைத்தது. வழக்கம்போல் அந்தச் சத்தத்தையும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுக் கதவைத் திறந்த ரகுநாதனின் முகம் மகிழ்ச்சியால் விகசித்தது. "ஹாய் ஹரிதாஸ்! வா வா உன்னிடம் இருந்து கடிதமே வரவில்லையே, ஏப்ரல் தரிசன நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறதே, இதுவரையில் நாம் அதைத் தவற விட்டதேயில்லையே என்று நினைத்து அன்னையிடம் இப்பொழுதுதான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். பிரார்த்தனை முடியவும் நீ வரவும் சரியாக இருக்கிறது.'' "All sincere prayers are granted, every call is  answered" என்ற அன்னையின் மந்திரம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிவிட்டது.

"ரகு திடீரென்று வந்து இறங்கி உன்னை திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்றுதான் கடிதம் போடவில்லை. முதலில் நான் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு அன்னையை நமஸ்கரித்து விட்டு, சாவித்ரியைப் படித்துவிட்டு வருகிறேன்.'

ஹரிதாஸ் பிரார்த்தித்து முடித்து வருவதற்கும் ரகுநாதன் ஆவி பறக்க காபி கலந்து எடுத்து வரவும் சரியாக இருந்தது.

"ரகு உன்னுடைய இந்தக் காபிக்காக என் நாக்கு எவ்வளவு ஏங்குகிறது தெரியுமா? அண்ணி பார்வதி பத்து வருடம் முன்பு இறந்து போனதிலிருந்து நீயே ஒண்டிக்கட்டையாக உன் ஒரே பெண் சந்தியாவையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து

கொடுத்துவிட்டாய். சமையலிலும் திறமைசாலியாக ஆகிவிட்டாய் உன் சமையல் பக்குவம் ஒரு பெண்ணுக்குக் கூட வராது. எப்படி உன்னால் முடிந்தது?'

"சமையலில் "நளபாகம்'' என்று கேள்விப்பட்டிருக்கிறாய். தமயந்தி பாகம்' என்று கேள்விப்பட்டதுண்டா? கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களில் கூட ஆண்கள்தான் சமைக்கிறார்கள். அது போகட்டும், தரிசன நாளுக்குப் போவதற்கு என்ன "பிளான்'' வைத்திருக்கிறாய்?' "நாம் என்ன பிளான் செய்வது? நாம் திட்டமிட்டால் நடந்து விடுமா? அம்மா மனசு வைத்தால் நாம் பாண்டி போக முடியும். வழக்கம்போல் சமர்ப்பணம்தான். இதுவரைக்கும் நாம் சமர்ப்பணம் செய்து ஏதாவது தரிசனநாள் தவறிப் போயிருக்கிறதா?'

"ஹரி கொஞ்சநேரம் "Life Divine" படித்துவிட்டு அன்னையிடம் அமர்ந்து தியானம் பண்ணலாமா?'

தியானம் முடித்து மதிய உணவையும் முடித்துவிட்டு ரகுநாதன் தன் வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்தார். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு "பான் பீடா' ஒன்றை எடுத்து ஹரிதாஸின் கையில் கொடுத்தார். ஹரிதாஸ் நெகிழ்ந்து போய் கண்களில் நீர் மல்க தன்னையறியாமல் ரகுநாதனைக் கட்டிக் கொண்டு விட்டார். ரகு, ரகு என்று நாத்தழுதழுக்கக் கூறிவிட்டு, ‘"நீயல்லவோ உண்மை நண்பன்! குறிப்பறிந்து ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதையறிந்து செய்வதில் உனக்கு நிகர் நீதான். ‘ நண்பன் என்றால் அவன் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்னை கூறியிருக்கிறார். என்னை அப்படி ஏற்றுக்கொண்ட ஒரே நண்பன் நீதான். நான் தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். என்னைச் சுற்றியிருப்பவர்களெல்லாம் இந்தப் பழக்கத்தை விட்டுவிடும்படி அட்வைஸ் செய்கிறார்கள். அவர்கள் சொல்வது என் நன்மைக்குத்தானென்றாலும் ஏற்கனவே குற்ற உணர்வில் பாதிக்கப்பட்டிருக்கும் என் மனம் அவர்கள் சொல்வதை

ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இந்தப் பழக்கத்தைத் தொடருகிறேன் என்கிறது. ஆனால் இப்பொழுது நீ எனக்காக இப்படி ‘ பானை வைத்து உபசரிக்கையில் ‘ ஓ இவனை நண்பனாக அடைய என்ன தவம் செய்தேன்? இதற்காகவே இந்தப் பழக்கத்தை விட்டுவிடலாமென்று தோன்றுகிறது. ரகு சில சமயங்களில் நான் உன்னையே அன்னையாகப் பார்க்கிறேன். ‘ தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று சொல்வார்கள். அந்த அன்னையைத் தரிசிக்க முடியாத குறை உன்னைப் பார்க்கையில் எனக்குத் தீர்ந்து விடுகிறது. இதுவரைக்கும் பெண்களிடம்தான் தாய்மை உணர்வைக் கண்டிருக்கிறேன். ஆனால் தாய்மையன்பு கொண்ட நான் சந்தித்த ஒரே ஆண் நீதான் ரகு', என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்.

இந்தப் புகழ்ச்சிகளினால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத ரகு தனக்கேயுரிய பாணியில் தஞ்சாவூர்வாசிகளுக்கேயுரிய ஸ்டைலில் வெற்றிலையைக் கடைவாயில் லாவகமாக செருகிக் கொண்டே பேசினார்.

"எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது ஹரி. எல்லா ஆத்மாக்களும் மகிழ்ச்சியோடு இருக்கணும். எல்லோருக்கும் அன்பை வாரி வழங்கணும். இதில் என் சுயநலம் கூட இருக்கிறது தெரியுமா? ஓர் ஆத்மாவைத் திருப்தி செய்யும்போது அந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிகிறது. அது என்னை மகிழ்விக்கிறது. The happiness you give makes you more happy than the happiness you receive என்று அம்மா சொல்லியிருக்காங்களே'.

"நான் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். குழந்தை சந்தியா எப்படி இருக்கிறாள்? அவளைக் கல்யாணத்தின்போது பார்த்தது. அவள் கணவர் சௌக்கியமா?'

"By Mother's grace அவள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறாள். அவள் மாமியார் அவளைப் பெற்ற தாயைப்போல் நடத்துகிறார். அவள் கணவன் ராம்குமார் மிகவும் நல்ல பிள்ளை, ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே, கூடிய விரைவில் நான் தாத்தாவாகப் போகிறேன்' என்றார் மகிழ்ச்சி பொங்கும் குரலில்.

"ஹையா' என்று ரகுநாதனே எதிர்பாராதவிதமாக அவரை ஒரு முறை மேலே தூக்கிக் கீழே இறக்கிவிட்டார்.

"ஏய் ஹரி என்ன இது சின்னக் குழந்தை மாதிரி?' "நீ சொன்னது சாதாரணமான விஷயமா என்ன? எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. எப்ப டெலிவரி டைம்? Scan எடுத்துப் பார்த்தாகி விட்டதா? பெண் என்றால் ‘ மீரா என்று பெயர் வைக்கணும், ஆண் என்றால் அரவிந் என்று பெயர் வைக்கணும். ரகு ஒரு விஷயம் நான் கவனித்தேன். நீ எல்லாவற்றிலும் பற்றற்ற ஒரு யோகியைப்போல் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கிறாய். ஆனால் நீ தாத்தாவாகப் போகும் விஷயத்தைச் சொல்லும்போது மட்டும் உன்னையறியாமல் அதீத மகிழ்ச்சியைக் காட்டிவிட்டது உன் முகம்'.

"நான் என்ன தெய்வப்பிறவியா? நானும் மனிதப் பிறவிதானே? நீதான் என்னை ஆண் வேடமணிந்த அம்மா என்று சொல்லி விட்டாய். எந்த அம்மாவிற்கும் தன் குழந்தையைப் பற்றிய விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படுவது சகஜம்தானே? ஏன் ஆதி சங்கரர் கூட எல்லாப் பற்றினையும் அறுத்த போதும், தாய்ப்பாசம் என்ற பற்றை அவரால் விட முடியவில்லையே'.

"சரி, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே, சந்தியா பெங்களூரிலிருந்து எப்பொழுது வருகிறாள்?' "அதுதான் எனக்கும் சரியாகத் தெரியவில்லை' சொல்லி முடிக்கவும், ‘ "சார் போஸ்ட்' என்று போஸ்ட்மேன் ஒரு கடிதத்தை வீசிவிட்டுப் போகவும் சரியாக இருந்தது. ஹரிதாஸ் ஓடிப் போய்க் கடிதத்தை எடுத்து வந்தார். அதில் எழுதியுள்ள விலாசத்தைப் பார்த்ததும், ‘ "ஹாய் இது சந்தியாவின் கையெழுத்துப் போலல்லவா இருக்கிறது? அன்னையின் அருளைப் பார்த்தாயா? நான் கேட்ட கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.'

"நீதான் பிரித்துப் படியேன்' "நானா?'‘ "ஏன் கூடாதா? நீ தோளில் தூக்கி வளர்த்த குழந்தையல்லவா சந்தியா? அவள் கடிதத்தைப் படிக்க உரிமையில்லையா?' என்றார் வாத்ஸல்யத்துடன். "நானா' என்று கேட்டதற்கு வெட்கப்பட்டுப்போய்க் கடிதத்தை உரத்த குரலில் படிக்க ஆரம்பித்தார்.

அன்புள்ள அப்பாவுக்கு,

சந்தியா அநேக நமஸ்காரங்கள். இங்கு நாங்கள் அனைவரும் சுகம். தாங்களும், தாங்கள் வழிபடும் அன்னையின் அருளால் சுகமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் நேற்று ‘ லேடி டாக்டரிடம் செக் அப்புக்குப் போயிருந்தேன். குழந்தை நல்லபடியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் மே மாதம் இரண்டாவது வாரம் டெலிவரி ஆகிவிடும் என்றும் டாக்டர் கூறினார். எனக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. ஆகையால் நான் பலஹீனமாக இருப்பதால் முடிந்தவரை ‘பெட் ரெஸ்டில் இருந்தால் நல்லது என்று டாக்டர் அபிப்பிராயப்படுகிறார். அதுதான் சிறிது கவலையைத் தருகிறது. மேலும் நம் வழக்கப்படி முதல் பிரசவத்திற்குப் பெண் தாய் வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பதால் என் கணவர் நாளை என்னை அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். என் புக்ககத்தினர் மிகவும் நல்லவர்கள். ‘ உன் வீட்டிலிருந்து யாராவது வந்துதான் அழைத்துப் போகவேண்டும் என்று சொல்லாமல் என் கணவரிடம் என் மாமியார் "ராமு, பாவம் சந்தியா தாயில்லாத பெண், நீயே கொண்டு போய் சென்னையில் விட்டுவிட்டு வா' என்று சொல்லிவிட்டார். எனவே நாங்கள் இரண்டு நாளில் கிளம்பி வருகிறோம். நீங்கள் ஸ்டேஷனுக்குக் கூட வரவேண்டாம். வந்த மறுநாளே என் கணவர் ஊர் திரும்பி விடுவார். ஹரி அங்கிள் கல்கத்தாவிலிருந்து எப்பொழுது வருகிறார்? அவரிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா? எனக்கு அவரைப் பார்க்க ஆவலாயிருக்கிறது. மற்ற விபரம் நேரில்.

கடிதம் படித்து முடித்தவுடன் நண்பர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ‘ "பாரேன் அன்னையின் மகிமையை! நான் சந்தியாவைப் பார்க்க வேண்டும்' என்று சொல்லி முடித்த உடனேயே அவள் வருவதாகச் செய்தி வருகிறது. என்ன ஆச்சரியம்?' சட்டென்று ரகுநாதனின் முகத்தில் இருள் கப்பியது. "ஹரி, கடிதம் வந்த மகிழ்ச்சியில் ஒரு விஷயத்தை மறந்தே போனேன்,

சந்தியாவுக்கு ஜான்டிஸ்' என்று எழுதியிருக்கிறாள். அவள் நல்லபடியாகப் பெற்றுப் பிழைக்க வேண்டும். தவிர, நிறைமாதம் கொண்ட, உடல்நிலை சரியில்லாத, bed rest - இல் இருக்க வேண்டிய கர்ப்பிணிப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு நான் எப்படி தரிசன நாளுக்கு பாண்டி வரமுடியும்? தரிசன நாளை இதுவரை தவற விட்டதேயில்லை. அதே சமயம் தாயில்லாத பெண்ணைத் தனியாக விட்டுவிட்டுப் போனால் கடமையிலிருந்து தவறியவனாவேன் என்ன செய்வது?''

ஹரிதாஸுக்கும் அப்பொழுதுதான் உண்மை நிலை உரைத்தது. சிறிதுநேரம் அவரும் கவலைப்பட்டாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, "ரகு அன்னை இருக்கையில் ஏன் கவலைப்படுகிறாய்? இதில் அம்மாவின் முடிவுதான் முக்கியம். நாம் தரிசன நாளுக்குப் போவதா வேண்டாமா என்பதையும் அவரே முடிவெடுக்கட்டும், ஈஸ்வரன் தாயுமானவராக வந்து பிரசவம் பார்க்கவில்லையா? அதுமாதிரி அம்மாவே வந்து பிரசவம் பார்ப்பார், கவலைப்படாதே, அம்மா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? மனிதன் வராத கஷ்டங்களையெல்லாம் வந்துவிடும் என்று நினைத்துக் கவலைப்படுகிறான். நாம் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். இப்பொழுது குழந்தை சந்தியாவை மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயார் செய்து கொள்ள வேண்டும், வா முதலில் கடைக்குப்போய் அவளுக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கிக் கொண்டு, அப்படியே நாளை சமையலுக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் வாங்கி வரலாம். முக்கியமாக ஒரு நல்ல லேடி டாக்டரைப் பார்த்து அப்பாயின்ட்மென்ட் பெற்றுக் கொண்டு வரலாம்'.'

"ஆமாம், நீ சொல்வதும் சரிதான். பார்வதி உயிரோடு இருந்திருந்தால் எந்த அளவுக்குக் குழந்தையை வரவேற்பாளோ, அந்த அளவுக்குக் குறையாமல் அவளை வரவேற்க வேண்டும்.'

மறுநாள் ஆட்டோ வாசலில் வந்து நின்றது. சந்தியாவைக் கைத்தாங்கலாகப் பிடித்துப் பரிவுடன் இறக்கிவிட்டான் அவள் கணவன் ராம்குமார். ஏற்கனவே அழகிய சிவந்த அவள் முகம்

தாய்மை பூரிப்பினால் இன்னும் மெருகு ஊட்டப்பட்டு மிளிர்ந்தது. ஆனாலும் முகத்தில் சிறிது களைப்பும், பாரத்தைச் சுமக்கும் சிரமமும் வெளிப்பட்டது. சிவந்த விரல்களில் மருதாணி; கைகளில் கலகலத்த கண்ணாடி வளையல்கள், அம்பாளின் பாதங்களைப் போல் சிவந்த பாதம். உள்ளே நுழையப் போனவளைத் தடுத்து நிறுத்தியபடி "அப்படியே நில்லு சந்தியா பக்கத்து வீட்டுப் பெண்ணை ஆரத்தி கரைத்து வரச்சொல்லியிருக்கிறேன். அப்பொழுதுதான் திருஷ்டி கழியும். வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா. மாப்பிள்ளை நகருங்கள். Luggage எல்லாம் நீங்கள் தொடக்கூடாது, நான்தான் எடுத்து வருவேன் என்று சொல்லி ஆட்டோவிற்குப் பணம் கொடுக்க பர்ஸைத் திறந்த ராம்குமாரை வலுக்கட்டாயமாகத் தடுத்து பர்ஸை அவரது சர்ட் பாக்கெட்டில் சொருகிவிட்டுத் தாமே ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தார். சந்தியாவிற்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

"ஹரி அங்கிள், என்ன இது என்னை இப்படி ஆனந்தக் கடலில் மூழ்க்கடிக்கச் செய்து விட்டீர்களே. வாசலில் மாக்கோலம், மாவிலைத்தோரணம், ஆரத்தியுடன் வரவேற்பு, உள்ளே அப்பாவின் சமையல் மணம் இங்கே வாசனை வீசுகிறது. உங்களைப் பார்த்த ஆனந்த அதிர்ச்சி'.

அவளுடைய உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை உள்ள ஒவ்வொரு அணுவும் பரவசப்படுவதை அவள் கண்ணில் பளிச்சிட்ட ஒளி வெளியிட்டது. மாப்பிள்ளை ராம்குமாருக்கும் ஏக மகிழ்ச்சி என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது, இப்படி ஒருவரால் அன்பை வெளிப்படுத்த முடியுமா? அன்று முழுக்க வீட்டில் ஒரே குதூகலம்தான், ஒருவரையொருவர் நன்கறிந்த நான்கு உள்ளங்கள் அன்பினால் பிணைக்கப்படும்பொழுது ஏற்படும் ஆனந்தத்திற்கு எல்லையேது? ரகுநாதன் விதம்விதமான மலர்களை வாங்கி வந்து சந்தியாவிடம் கொடுத்து, அம்மா! உன் கையால் மலர்களை அடுக்கி அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து நல்லபடியாக பிரசவம் ஆக வேண்டுமென்று வேண்டிக்கொள். உன் அம்மா பார்வதி இருந்தால்

கூட உன்னை அவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது. இந்தத் தெய்வீக அன்னை அதைவிடப் பன் மடங்கு அதிகமாக உன்னைக் கவனித்துக் கொள்வார்! என்று கூறினார். உடனே சந்தியா அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள்.

மறுநாள் ராம்குமார் ஊருக்குக் கிளம்பும்போது ஹரிதாஸ் அவசர அவசரமாக சூட்கேஸைத் திறந்து தம் சார்பாகச் சந்தியாவுக்கு வாங்கி வைத்திருந்த புடவை, ரவிக்கையையும், மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டி, சர்ட்டையும் வைத்துக் கொடுத்துத் தன் அன்பை வெளிப்படுத்தியதில் மிகவும் நெகிழ்ந்து போயினர் சந்தியாவும் அவள் கணவரும்.

ராம்குமார் ஊருக்குப் போய் இரண்டு நாட்களாயின. தரிசனத் தினத்திற்கு இன்னும் நான்கு நாட்களே பாக்கியிருந்தன. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் ரகுநாதன்.

"குழந்தாய், நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன், எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.'

"ஏனப்பா தயங்குகிறீர்கள்? நான் என்ன வேற்று ஆளா? என்னிடம் சொல்லத் தயங்குவதுதான் எனக்கு வேதனையைத் தருகிறது'.

"நான் தரிசன நாளுக்கு 24ஆம் தேதி பாண்டி போக வேண்டும். அதற்குத்தான் ஹரி அங்கிள் வந்திருக்கிறார். உன்னை எப்படித் தனியாகவிட்டுப் போவது என்று கவலையாக இருக்கிறது. ஆனால் நான் உன்னை விட்டுவிட்டுப் போய் விட்டேனே என்று நீ வேதனைப்படக்கூடாது, அம்மா இருந்திருந்தால் இப்படித் தனியே விட்டுப் போவாளா என்று நீ நினைத்துவிடக் கூடாது'.'

"அப்பா, இத்தனை நாட்களாக நீங்கள் என்னைப் புரிந்து கொண்டவிதம் இதுதானா? அம்மா இறந்ததும் கண்ணுக்குக் கண்ணாக அம்மாவும், அப்பாவுமாக நீங்கள் என்ன வளர்க்க எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பீர்கள்? தாயில்லாத குறையே எனக்கு இதுவரை தெரிந்ததில்லை. நீங்கள் எனக்குக் கெடுதல் நினைப்பீர்களா? நீங்கள் போவதைப்பற்றி என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதமே, என்றாள் நிதானமாகத் தெளிவான குரலில்.

"அம்மா சந்தியா என் வளர்ப்பு வீண் போகவில்லை. மனதுக்கு எத்தனை இதமாகப் பேசுகிறாயம்மா? ஒரு 36 மணி நேரத்துக்குப் பொறுத்துக்கொள். பக்கத்து வீட்டுப் பெண்ணை உனக்குத் துணையாக வைத்துவிட்டுப் போகிறேன்'.' ‘"சரியப்பா'' அவளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துவிட்டு அமைதியான மனத்துடன் அன்னையின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுக் கிளம்பினர் நண்பர்கள் இருவரும்.

அற்புதமாகத் தரிசன நாளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்பிலாழ்த்தியது. சமையலறையிலிருந்து குக்கரின் விசில் சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தால் சந்தியா கண்ணாடி வளையல் ஓசை கலகலக்க மிகுந்த தெம்புடன் முக்கால்வாசி சமையலை முடித்துவிட்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். என்ன இது நம்பவே முடியவில்லையே! போகும்போது ஓர் அடி எடுத்து வைக்கக்கூடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், மூச்சிறைக்க நடந்து கொண்டிருந்தவள், பெரும்பான்மையான நேரம் படுக்கையிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தவள், ஒரே நாளில் எப்படி இவ்வாறு மாறினாள்?

"என்னம்மா சந்தியா? ஒரு நாளில் எப்படி இவ்வளவு மாற்றம் வந்தது? போகும்போது இருந்த நிலை என்ன? இப்பொழுதுள்ள நிலை என்ன? என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்க்கடித்து விட்டாயே அம்மா, எப்படி நடந்தது இது?'

"சொல்கிறேன் அப்பா, ஹரி அங்கிள், நீங்கள் இருவரும் மிகவும் களைப்பாக இருப்பீர்கள். முதலில் இந்தக் காப்பியைக் குடித்துவிட்டு, குளித்துவிட்டு உங்கள் பூஜையை முடித்துவிட்டு வாருங்கள்.

அதற்குள் சமையலை முடித்துவிட்டு நானே என் கையால் உங்களுக்குப் பரிமாறப் போகிறேன். சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டே பேசலாம்'.' ஹரியும், ரகுவும் ஒருவரையொருவர் ஆனந்தமாகப் பார்த்துவிட்டு அவள் சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவள் சுவையுடன் சமைத்துப் பரிமாறிய உணவை உண்டுவிட்டு அவள் சொல்லப் போவதைக் கேட்கும் ஆவலில் அமர்ந்தனர். இன்னும் அவர்களுக்குத் தாம் காண்பது கனவா நனவா என்று புரியவில்லை. தங்களையே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். சுவரில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டிக்கொண்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள் சந்தியா.

‘ "அப்பா உங்களைப் பாண்டிக்குப் போகச் சொல்லிவிட்டேனே தவிர உள்ளூர எனக்கு பயம்தான். நீங்கள் வரும்வரை உயிரோடு இருப்பேனோ என்று சந்தேகப்பட்டேன். திடீரென்று என்னையறியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். அழுதுகொண்டே என்னையறியாமல் தூங்கிவிட்டேன். அப்பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கனவு என்றும் சொல்ல முடியாது. ஒரு அயல் நாட்டுப் பெண்மணியைப் பார்த்தேன். அவர் புடவை அணிந்திருந்தார். தலையைச் சுற்றி வட்டமாக band மாதிரி ஏதோ கட்டியிருந்தார். அவர் என்னருகே வந்து அமர்ந்து என் தலையை அதீத அன்புடன் வருடிக் கொடுத்தார். அப்புறம் தன் இனிய குரலில் என்னிடம் பேசினார்.'

‘ "குழந்தாய், கவலைப்படாதே கூடிய சீக்கிரம் நீ குணமாகி விடுவாய், உனக்குச் சுகப்பிரசவம் ஆகும்''. எத்தனை நேரம் அவர் என்மேல் தன் அன்பை சொரிந்தார் என்று எனக்குத் தெரியாது. எப்பொழுது என்னை விட்டுப் போனார் என்றும் எனக்குத் தெரியாது. என்னையறியாமலேயே நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியான தூக்கத்தில் ஆழ்ந்து போனேன். மறுநாள் காலை எழுந்தவுடன் மிகவும் தெம்புடனிருந்தேன். எனக்கு நானே சிரமமில்லாமல் சமைத்துக்கொள்ள முடிந்தது. இப்பொழுது மிகவும் தெம்புடன் இருக்கிறேன்'.'

ரகுநாதன் அவசர அவசரமாகத் தன் மேஜை இழுப்பறையைத் திறந்து அன்னையின் விதம்விதமான படங்களைக் காட்டி, "அம்மா சந்தியா, நீ பார்த்த பெண்மணி இந்தப் படங்களில் இருப்பதுபோல் இருந்தாரா?'

அவற்றிலிருந்து அன்னையின் ஒரு குறிப்பிட்ட படத்தை எடுத்துக்காட்டி, "இவங்களைத்தான் நான் பார்த்தேன், இவங்க யாரு?'

"இவர்கள்தான் என்னுடைய குரு, அன்னை. இவர்களுடைய தரிசனத்திற்காகத்தான் உன்னுடைய மோசமான நிலையிலும் உன்னை விட்டுப் போனேன். அவருடைய அருளால்தான் நீ குணமாகி இருக்கிறாய்?'

உடனே சந்தியா ஆர்வத்துடன், "அப்பா எனக்கும் அவரின் படம் ஒன்று இருந்தால் கொடுங்களேன். நானும் இனி அவர்களை வணங்க ஆரம்பிக்கிறேன்'.

இது நடந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து மாப்பிள்ளை ராம்குமார் திடீரென்று வந்து இறங்கினார்.

"என்ன மாப்பிள்ளை ஆச்சரியமாக இருக்கிறது?' "மாமா, நான் தவறு செய்து விட்டேன். நான் இங்கு வந்து இறங்கியவுடன்தான் ஒரு விஷயம் என் மூளைக்கு எட்டியது. பெண்களே இல்லாத வீட்டில் நீங்கள் எப்படிப் பிரசவம் பார்க்க முடியும்? முதல் பிரசவம் பிறந்த வீட்டில்தான் பார்க்க வேண்டும் என்பது உண்மையென்றாலும், அந்த மரபைக் கட்டிக் காப்பதற்காக என் மனைவியைத் துன்புறுத்த விரும்பவில்லை. தாயில்லாத அவளுக்குத் தாயாக இருந்து என் அம்மாவே பிரசவம் பார்ப்பார். அவளை என்னுடன் தயவு செய்து அனுப்பி வையுங்களேன்'.

ரகுநாதன் இதையும் அன்னையின் அருளாக ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக மரபு வழக்கத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்காத சமூகத்தில் இது வழக்கத்திற்கு விரோதமாக இருக்கையில் அதை அன்னையின்

அருளன்றி வேறு என்ன சொல்ல? மகிழ்ச்சியுடன் சந்தியாவை அவள் கணவனுடன் அனுப்பி வைத்தார்.

அடுத்த வாரத்தில் அவருக்குத் தந்தி வந்தது. "சந்தியா சுகப்பிரசவத்தில் ஓர் அழகான ஆரோக்யமான ஆண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்' - ராம்குமார்.

தந்தி வாசகத்தைப் படித்து ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்த ரகுநாதன் அதை அன்னையின் பாதத்தில் வைத்து வணங்கி நன்றி செலுத்தும்விதமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ‘ நானிருக்க பயமேன்?' என்று கேட்பதுபோல் அன்னை படத்திலிருந்து மோகனப் புன்னகை புரிந்தார்.

‘ அன்னையின் மந்திரங்கள்' என்ற புத்தகத்திலிருந்து கீழ்க்கண்ட வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.

இறைவனின் அருளின் மேல் உள்ள நம்பிக்கையின் மூலம் எல்லா இடையூறுகளையும் எதிர்த்துச் சமாளிக்க முடியும்.




Savitri - 255




Daily Savitri - 255

Sri Aurobindo's Savitri


The events that shape the appearance of our lives
Are a cipher of subliminal quiverings
Which rarely we surprise or vaguely feel,
Are an outcome of suppressed realities
That hardly rise into material day:
They are born from the spirit's sun of hidden powers
Digging a tunnel through emergency.


- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 52

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.


- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, March 28, 2013

Savitri - 254



Daily Savitri - 254

Sri Aurobindo's Savitri


The events that shape the appearance of our lives
Are a cipher of subliminal quiverings
Which rarely we surprise or vaguely feel,
Are an outcome of suppressed realities
That hardly rise into material day:
They are born from the spirit's sun of hidden powers
Digging a tunnel through emergency.



- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 52

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.


- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, March 27, 2013

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 10


ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள்  - 10

அண்டை மாநிலத்திலிருந்து அந்த ‘அமுதசுரபி’ பெண் வாசகர், தன் குடும்ப நிலையை விளக்கி திரு. கர்மயோகி அவர்களுக்கு  ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

("எல்லாம் தரும் அன்னை " என்ற நூலில் இந்தக் கட்டுரையை  திரு கர்மயோகி அவர்கள்  எழுதியுள்ளார்.
அந்தப் பெண் வாசகருடைய கணவர் பாதுகாப்புத் துறையில் பணி புரிகின்றார். அவருக்கு ஐந்து குழந்தைகள். அதுவன்று பிரச்சினை. அவர் கணவர் பாரதத்தின் ஏதோ ஒரு மூலையில் வேலை செய்கிறார். குடும்பமோ இன்னொரு மூலையில் வாழ்ந்து வருகிறது. பாதுகாப்புத் துறையின் கிளைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவர் பறந்து போய்ப் பணி செய்ய வேண்டியதாயிருக்கும். குடும்பத்தையும்கூடத் தூக்கிக் கொண்டு பறக்க முடியுமோ? ‘முடியாது’ என்பதால், அவர் ஓர் இடம்; அவர் குடும்பம் ஓர் இடம். இதுதான் பிரச்சினை. ஓர் அவசரம் என்றால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளப் பல நாட்கள் பயணம் செய்தாக வேண்டும்.

பிரிவு ஒரு சோதனை என்றால், அந்தப் பெண்மணிக்குக் குடும்பப் பொறுப்பு இன்னொரு சுமை. ‘தந்தைக்குத் தந்தையாக இருந்து தம் குழந்தைகளைக் கட்டிக் காக்கவும், வழி காட்டி நடத்திச் செல்லவும், அன்புடன் ஆறுதல் சொல்லவும் தம் அன்புக் கணவர் அண்மையில் இல்லையே’ என்று விழிகள் எல்லாம் வியர்த்துத் துன்புற்றார் அவர்.

இன்னொரு வகையிலும் அவருக்குத் துயரம் தொடர் கதையாக இருந்தது. அவருடைய கணவர் கடுமையான உழைப்பாளி, அப்படி இரு ஆண்டுகள் உண்மையாக உழைத்த பிறகும்கூட அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லை. இது வாசக அன்பருக்கும், அவர் கணவருக்கும் மிகுந்த வேதனையை அளித்தது.

துயரம் அதோடு முடிந்துவிடவில்லை. மேலும் தொடர்ந்தது.

அந்த அன்பர் ஒரு முறை தம் கணவரின் பொருட்டு குழந்தைகளையும், குடும்பத்தையும் தம் பெரிய பெண்ணின் பொறுப்பில்விட்டுச் செல்ல நேர்ந்தது. ஆனால், அவர் தம் கணவரோடு வசித்த காலத்தில் ஊரில் இருந்த குழந்தைகளைச் சுற்றியே அவர் மனம் அலைந்தது. அவருக்கு வேதனையே விடியலாக வந்து, பொழுதாகக் கழிந்தது. இந்த நிலையில் ஒரு நாள் அவரும், அவர் கணவரும் தம் குழந்தைகளைப் பார்ப்பதற்காக ஆவலோடு ஊருக்கு வந்தபொழுது, வீட்டில் இரண்டாவது மகள் இறந்து கிடந்த காட்சியைத்தான் அவர்களால் காண முடிந்தது.

இத்தகைய சூழ்நிலையில் அந்த அன்பர், ‘அமுதசுரபி’யில் வெளியாகிக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அரிதினும் அரிய கொடைகளை எளிதினும் எளிதாகப் பக்தர்களுக்கு அருளும் அன்னையின் சிறப்பை அறிந்தார் அவர்.

‘இனிக் கவலைப்பட வேண்டியதில்லை, அதை அன்னை பனி போல் நீக்கிவிடுவார்’ என்று அவர் தெளிந்தார்.

அவருடைய மிகப் பெரிய கவலை என்ன? நெடுந்தொலைவில் கணவர் வேலை பார்ப்பது. அவர் ஊருக்கே மாற்றலாகி வந்தால், நல்லதுதான். ஆனால், அது சாத்தியம் அன்று. தமிழ்நாட்டில்தான் அவர் பணியாற்றிய துறைக்கு கிளை இருந்தது. அவர் தமிழ் நாட்டிற்கு மாற்றலாகி வந்துவிட்டால்கூட அது சொந்த ஊரில் பணியாற்றுவது போலத்தான். ஏனென்றால், அவர் சில மணி நேரப் பயணத்தின் மூலம் ஊருக்கு வந்து தம் குடும்பத்தினரைச் சந்தித்துவிடலாம்.

ஆகவே, அந்த அன்பர் தம் கணவருக்குத் தமிழ்நாட்டில் மாற்றல் கிடைக்க வேண்டும் என்று அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டு ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைத்தார்.

அன்னையின் அருளால் விரைவிலேயே அவருடைய கணவரைச் சென்னைக்கு மாற்றல் செய்துவிட்டார்கள். அந்த அளவில் அன்பரின் மனக் கவலை தீர்ந்தது. கவலைகளின் தொகுப்பானது வாழ்க்கை. அதில் ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை முண்டிக் கொண்டு வரும். இப்பொழுது அந்த அன்பருக்குத் தம் மூத்த பெண்ணின் திருமணத்தைப் பற்றிக் கவலை.

அந்தப் பெண் பி.யூ.சி.வரை படித்திருந்தாள். நல்ல குணங்களும், கலகலப்பான சுபாவமும் கொண்ட அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நிகழ்ந்தாக வேண்டும். ஆனால், ஊர் ஊராக வலை போட்டுத் தேடி நல்லதொரு மணமகனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே அந்தப் பெண்ணை மணந்து கொள்ள ஒருவன் காத்திருந்தான். பெரியவர்கள் முன்நின்று திருமணத்தை முடிக்க வேண்டியதுதான் பாக்கி. இரு வீட்டுப் பெரியவர்களும் திருமணத்தை விரைவில் நடத்திவிட மிக ஆர்வமாக இருந்தார்கள். இது வரையில் சிக்கல் இல்லை. திருமணத்தை நடத்தப் பெருந்தொகை தேவைப்படுகின்றதே, அதுதான் பெண்ணின் பெற்றோருக்குப் பெரிய சிக்கலாக இருந்தது.

குடும்பத் தலைவர் ஒரு புறமும், குடும்பம் மற்றொரு புறமுமாக இருக்க நேர்ந்ததால் அவர்களுக்குச் செலவைச் சமாளிப்பதே மரணக் கிணற்றைத் தாண்டுவது போல் இருந்தது. இந்த நிலையில் ஒரு தொலை நோக்கோடு பெண்ணின் திருமணத்திற்குப் பணத்தைச் சேமித்து வைப்பது என்பது நடைமுறைச் சாத்தியம் அன்று. குடும்பத்தை ஓட்டுவதே ‘உன்னைப் பிடி, என்னைப் பிடி’ என்று இருக்கும்பொழுது, திருமணத்திற்காகத் திடீரென்று ஆயிரக் கணக்கில் பணத்தைப் புரட்டுவது எப்படி?

அவர்களுக்கு இரண்டு வீட்டு மனை நிலத்தைத் தவிர வேறு சொத்தில்லை. அவர்கள் அந்த மனைகளை விற்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவற்றை வாங்குவதற்கு யாராவது உடனடியாக முன்வர வேண்டும். அப்படியே வந்தாலும் திருமணத்திற்குத் தேவைப்படும் பணம் முழுதும் கிடைக்குமா என்பது சந்தேகம்.

இந்தச் செய்திகளை எல்லாம் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்த அந்த அன்பர், “எங்களுக்குத் தெய்வத்தைத் தவிர வேறு யாரும் துணை இல்லை. எங்கள் பெண்ணின் திருமணம் எந்த விதத் தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும். அதை நிகழ்த்தி அருளக் கூடிய அன்னையை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதைப் பற்றி விவரமாக எழுதுங்கள்” என்று கோரிக் கடிதத்தை முடித்திருந்தார்.

நான் அந்த அன்பருக்கு உடன் பதில் எழுதினேன். அதன் சுருக்கம் இது: “அன்னையின் அன்பர்களுக்குத் தேவையானவை இரண்டு. அவை நம்பிக்கையும், பக்தியுமாகும். ‘நாம் கோரியதை அன்னையின் அருள் பெற்றுத் தரும்’ என்று உறுதியாக இருப்பது நம்பிக்கை. எதைக் கோருகின்றோமோ, அது செயல்படுவதற்கான முயற்சியைப் பூரணமாகக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கோரியதைப் பெறுகின்றவரை, அதோடு சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்களையும் அன்னையைப் பணிந்து செய்துவர வேண்டும். இப்படிச் செய்வது பக்தி. இந்த இரண்டும் (நம்பிக்கையும், பக்தியும்) நிறைந்தவர்களுக்கு, தடையற்ற செல்வமும், குறைவற்ற சுகங்களும் பெருகிக் கொண்டே இருக்கும்”.

“ஆகவே, உங்கள் கணவருடைய உத்தியோக உயர்வு, உங்கள் பெண்ணின் திருமணம் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள மேற்கூறியவாறு அன்னையை வணங்கி வாருங்கள். அன்னை அருள் செய்வார். அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டு ஆசிரமத்திற்கு ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வையுங்கள்”.

நான் அந்தக் கடிதத்தை 1985, ஜூன் கடைசி வாரத்தில் எழுதி இருந்தேன்.

அந்த அன்பர் சில நாட்களுக்குள், அதாவது ஜூலை முதல் வாரத்தில் பதில் எழுதி இருந்தார். அதில், “உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் படித்ததிலிருந்து என் மனத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்பட்டுள்ளன. என் துன்பங்கள் யாவும் மறைந்து விட்டன போன்ற ஓர் உணர்வு. அன்னையே எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டதைப் போன்றதோர் எண்ணம். ஒரு மகிழ்ச்சியான செய்தி. என் கணவருக்கு உத்தியோக உயர்வு கிடைத்துவிட்டது. 19 வருடங்களுக்கு முன்னால் கிடைத்திருக்க வேண்டிய இந்தப் பதவி உயர்வு, இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இது அன்னையின் அருளாலேயே கிடைத்திருக்கிறது”.

“உங்கள் அறிவுரைப்படி உடனே அன்னைக்குக் காணிக்கையை அனுப்பிவிட்டேன். பெண்ணின் திருமணத்தை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு தினமும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து வருகின்றேன். மாப்பிள்ளை வீட்டார் விரைவில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று விரும்புவதால், திருமணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவதாக முடிவு செய்துள்ளோம். அன்னைதான் குறித்த நாளில் திருமணத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்” என்று எழுதி இருந்தார்.

நாட்கள் பறந்தன. திருமணத்திற்குத் தேவையான பணம் இன்னும் அவர்கள் கைக்குக் கிடைத்தபாடாக இல்லை. திருமண நாளோ நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வது? அவர்களால் செய்ய முடிந்தது எல்லாம் அன்னையை முழுமையாக நம்புவதுதான். அந்த அன்பரும், அவர் கணவரும் பாண்டிச்சேரிக்கு வந்து, ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியை வணங்கிப் பிரார்த்தனை செய்து கொண்டு ஊருக்குத் திரும்பிப் போனார்கள். இது நிகழ்ந்தது, 1986, ஜனவரி மாதத்தில் என்று நினைக்கின்றேன்.

பின்னர் அந்த அன்பரிடமிருந்து வந்த கடிதம் மிக ஆறுதலாக இருந்தது. அதில், தம் பெண்ணின் திருமணம் சிறப்பாக நிகழ்ந்ததாகவும், அன்னையின் அருள் வியக்கும் விதத்தில் துணை புரிந்ததாகவும் எழுதி இருந்த அவர், மேலும் கூறுவார்:

“எங்களைப் பொறுத்தவரை என் மகளின் திருமணத்தை அன்னைதான் நடத்திக் கொடுத்துள்ளார். பார்த்தவர்கள் வியக்கும் வண்ணம் திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அந்தப் பெருமை அன்னையையே சேரும். ஏனெனில், திருமணம் நிச்சயிக்கப்பட்டபொழுது எங்களிடம் பணம் இல்லை. எங்களுக்கு ஒரே சொத்தாக இருந்த இரண்டு வீட்டு மனைகளை விற்றுத் திருமணத்தை முடித்துவிடலாம் என்று சுலபமாக நினைத்து விட்டோம். ஆனால், அவற்றை விற்றபொழுதுதான் சிரமமே ஆரம்பமாகியது. விற்பனையின் மூலம் கிடைத்த பணம் திருமணச் செலவிற்குப் போதுமானதாக இல்லை. துண்டு விழும் தொகையை எங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து கடனாகப் பெற முயன்றோம். அவர்களும் தருவதாக வாக்களித்து இருந்தார்கள்”.

“திருமணத்திற்கு இன்னும் நான்கே நாட்கள்தாம் இருந்தன. அது வரையில் கடன் கொடுப்பதாகக் கூறியவர்களிடமிருந்து எங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. என்றாலும் பணம் கேட்டு நாங்கள் யாரையும் வற்புறுத்த முடியாது. என்ன செய்வது? இது போன்ற சூழ்நிலையில் மிகவும் தைரியமாக இருக்கக் கூடிய என் கணவர்கூட அதிகம் குழம்பிப் போய்விட்டார். “மேற்கொண்டு நாம் எப்படிச் சமாளிப்பது?” என்று என்னைக் கேட்டார். “இந்தத் திருமணத்திற்கு ஆரம்பம் முதல் இன்றுவரை அன்னைதான் துணையாக இருக்கிறார். ஆகவே, அவர் எப்படியும் திருமணத்தை நல்லபடியாக முடித்துக் கொடுப்பார்” என்று கூறினேன் நான். அன்று இரவு முழுதும் நானும், அவரும் அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தோம்”.

“மறு நாளும் வந்துவிட்டது. திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. கலக்கத்துடன் நாங்கள் அன்றையக் காலைப் பொழுதை வரவேற்றபொழுது, ‘கலங்காதீர்கள்’ என்று கூறுவதைப் போல எங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்த ஒருவர் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து வேறு இடங்களில் நாங்கள் எதிர்பார்த்த பணமும் மளமளவென்று மழை போல் வந்து சேர்ந்துவிட்டது. திருமணமும் எந்த விதத் தடங்கலும் இன்றிச் சிறப்பாக நிகழ்ந்தது. எங்களை வாழ வைத்து, எங்கள் பெண்ணுக்கும் சிறப்பான வாழ்வைக் கொடுத்த அன்னையின் அருளை, மரணத் தறுவாயில்கூட நாங்கள் மறக்க மாட்டோம்”.

அந்த அன்பரைப் போன்று நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள், அன்னையால் ஆசீர்வதிக்கப்படுகின்றார்கள். அவர்கள் நாளும் நன்மைகள் பலவற்றைப் பெற்று வாழ்வில் சிறக்கின்றார்கள்.

Previous Part -
 ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 9
----------------------------------------------------------------------

Savitri - 253



Daily Savitri - 253

Sri Aurobindo's Savitri


Our outward happenings have their seed within,
And even this random Fate that imitates Chance,
This mass of unintelligible results,
Are the dumb graph of truths that work unseen:
The laws of the Unknown create the known.


- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 52

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.


- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, March 26, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு/வழி முறைகள் -4



ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழிமுறைகள் -4 

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல்:



ஒரு பிரபலமான ஹனுமார் கோயில். அங்கு கொண்டாடும் லக்ஷதீப திருவிழாவுக்கு ஜில்லாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதுண்டு. அக்கோயிலின் பிரபலத்திற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குருக்கள்தான் என்பார்கள். குருக்களுக்கு ஹனுமாரிடம் ஈடுபாடு அதிகம். அவருடைய ஆர்வத்தாலேயே கோயில் பிரபலம் அடைந்தது. அவருடைய முகம் ஹனுமார் போலவே இருக்கும். குருக்கள் ஹனுமாரைத் தம் ஆன்மாவிலும், உடலும் பிரதிஷ்டை செய்துள்ளார். ஹனுமார் மீதுள்ள பக்தியால் (identification) அவருடன் ஒன்றிப்போய்விட்டார். தம் முகம்கூட தாம் வணங்கும் தெய்வத் திருவுருவம் தாங்கும் அளவுக்கு ஹனுமாருடன் குருக்கள் உள்ளும், புறமும் இரண்டறக் கலந்துவிட்டார்.

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்யுமுன், நாம் அன்னையை மனதில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கண்களை மூடி உள்ளே மூடிய கண்களின் பார்வையைச் செலுத்தினால், அன்னை மனத்தில் கோயில் கொண்டுள்ளது தெரிய வேண்டும். அந்நிலைக்கு வந்த பின்னரே வீட்டில் அன்னையின் சான்னித்தியத்தை நிலைபெறச் செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், வீட்டில் உள்ளவர் அனைவரும், அன்னைக்குப் புறம்பான செயல்களை விலக்கி, அன்னைக்கு முக்கியமான செயல்களை விரும்பிச் செய்தால், அன்னையை வீட்டில் பிரதிஷ்டை செய்வது எளிது. அப்படியில்லை என்றால் அதிகமான பிரயத்தனத்தால்தான் அதைச் சாதிக்க முடியும்.

நம் மனத்திலும், உடலிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல் முதற்படி. இடையறாது மனத்தால் நினைத்தால் அன்னை அங்கு நிரந்தரமாகக் குடியேறுவார். உடலைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, உடலால் மனதறிந்த தவறு எதுவும் செய்யாவிட்டால், உடல் அன்னை குடியேறுவதற்குத் தகுதி உள்ளதாகிவிடும். நம் உடல் அல்லது உடலுக்குரிய சூட்சமச் சக்கரத்தில், அதாவது மூலாதாரத்தில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முயன்று, வெற்றி பெறுதல் அடுத்த கட்டம். எளிதானது இல்லாவிட்டாலும், அது பலித்துவிடும். பின்னர் நம் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறிது நேரம் தினமும் நின்று

தியானம் செய்தால், நாளடைவில் வீட்டில் அன்னையிருப்பது தெரியும். 19 வயது பையன் ஓர் அன்பர் வீட்டிற்கு வந்தான். சற்றுத் தொலைவில் அவனுக்கு அவர் வீட்டிற்கு மேலே பெரிய ஒளி தெரிந்தது. யாரிடமும் சொல்லக் கூச்சப்பட்டான். அவர் வீடு மாறினார். புது வீட்டில் அவனுக்கு ஒளி சிறிதே தெரிந்தது. 3 மாதங்களுக்குப் பின்னர் புது வீட்டில் பழைய அளவுக்கு அவனால் ஒளியைப் பார்க்க முடிந்தது. பின்னர் அவன் அவரைச் சந்தித்து தான் கண்டதைச் சொல்லி விளக்கம் கேட்டான்.

பக்தருடைய இடைவிடாத தியானம் அன்னையின் ஒளி அவர் வீட்டில் வானளாவ உயரும்வரை கொண்டு வந்துள்ளது.
         
                            --------------------------------

 அன்னையை நம் வீட்டில் உள்ளவர் அனைவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்வது:

தம் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவராலேயே இதைச் செய்ய முடியும். இடைவிடாது அன்னையைப் பக்தியுடன் நினைவுகூர்பவர்க்கு மனதில் அன்னை வந்து நிரந்தரமாகத் தங்குவார். நம் மனதில் அன்னை தங்கிவிட்டார் என்பதற்கு ஏதாவது அறிகுறி உண்டா? என்றால் முக்கியமானவற்றை மட்டும் சொல்கிறேன். ஏராளமான அறிகுறிகள் உண்டு.

1. மனம் அலாதியான சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து, லேசாகி, வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை என்று கருதும்.
2. தூக்கம் தியானம் போன்றிருக்கும். தூங்கி எழுந்தால் தியானம் கலைந்தது போன்றிருக்கும்.
3. பயம், சந்தேகம், கவலை போன்றவை எக்காரணத்தை முன்னிட்டும் எள்ளளவும் இருக்காது.
4. கண்களை மூடினால் அன்னை நெஞ்சில் இருப்பது தெரியும். உருவம் தெரியாவிட்டாலும், அன்னை இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.

தன் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ததைப் போலவே அன்னையை உணர்விலும், உடலிலும், வீட்டிலும் முழுமையாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதுவே முதற்படி. சுருக்கமாகச் சொன்னால் எந்த உணர்ச்சி வருமுன்னரும் அன்னை நினைவு வந்தால் அன்னையை உணர்வில் பிரதிஷ்டை செய்தாயிற்று எனலாம். எந்தச் செயலையும் ஆரம்பிக்கும் முன்னே அன்னை நினைவு தானே வந்தால் உடலில் அன்னை உறைகின்றார் என்று பொருள். நம் வீட்டிற்கு வருபவர்கள் இது அன்னை குடி இருக்குமிடம் என்று உணர்ந்தால், நம்மிடம் சொன்னால் அன்னை நம் வீட்டிற்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

இதுவரை செய்வதே பக்தனைப் பொருத்தவரை பெரிய காரியம். அடுத்த கட்டமே அன்னையை நம் வீட்டார் மனதில் பிரதிஷ்டை செய்வது. அதையும் பூர்த்தி செய்வது யோகத்தில் வெற்றி கண்டதற்கு நிகராகும்.

நம் வீட்டில் உள்ள அனைவரும் நம்மிடம் நல்லெண்ணம், அன்பு மற்றும்  நம்பிக்கையுடையவராயிருந்தால்தான் இதைச் செய்ய முடியும். நமக்கு முரணானவர், நம்மைப் பிடிக்காதவர், நம் மீது நம்பிக்கையில்லாதவர், நம் மீது கசப்புள்ளவர்கள் மனதில் நம்மால் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முடியாது. முயன்றால் பலன் எதிர்மாறாக இருக்கும். இதைச் செய்யும்பொழுது பிறரைக் கலந்து ஆலோசிக்காமலே செய்ய வேண்டும். எப்படி ஒருவருடைய மனதைத் தெரிந்துகொள்வது என்ற கேள்வி 10இல் 9 பேரிடம் எழாது. ஏதோ ஒருவர் விஷயத்தில் நாம் தெளிவில்லாமல் இருப்போம். நாம் அன்னையை இவர் மனதில் இருத்தினால் இவர் ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தால், சுலபமாகச் சோதனை செய்யலாம்.

நாம் மனதை ஒரு நிலைப்படுத்தும்பொழுது (concentrate) தலையிலாவது, நெஞ்சிலாவது ஒரு நிலைப்படுத்துகிறோம். அதே போல் தியான அறையில் இருந்து ஆபீஸில் நம் அறையில் நாம் நம் மனதை ஒரு நிலைப்படுத்தலாம் (we can concentrate on our office while sitting in our meditation room). அதே போல் மற்றவர் மனதில் நம் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்தினால், அன்னையை அவர் மனதில் நாம் நினைத்தால், மாடியிலிருந்த அவர் எழுந்து உங்களை நோக்கி வந்தால், அல்லது அவர் முகம் மலர்ந்தால், அல்லது உங்கள் கருத்தை அவர் வெளியிட்டால், (நீங்கள் நினைத்தபடி அவர் செய்தால்), அல்லது பொதுவாக அவர் நல்ல காரியம் செய்தால், நீங்கள் அவர் மனதில் அன்னையை இருக்கச் செய்ததை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். மாறாக அன்னையை அவர் மனதில் நீங்கள் நினைத்தவுடன் அவருக்கு எரிச்சல் வந்தால், உங்களிடம் சண்டைக்கு வந்தால், உங்களைத் திட்டிப் பேசினால், கொட்டாவி வந்தால், அவர் எழுந்து நடக்கும் பொழுது மேஜை மீது இடித்துக்கொண்டால், அன்னையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனப் பொருள்.

பிள்ளைகளானாலும், கணவனானாலும், மனைவியானாலும், பெற்றோரானாலும், அன்னையை அவர்களுக்கு வலியுறுத்தி, அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக, கொடுக்க முயலக்கூடாது. அது தவறு; பிடிவாதமாக அதை ஒருவர் செய்தால் மற்றவரால் அவருக்குத் தீங்கிழைக்க முடியும்.

நம்மவர் அனைவரும் நம்மிடம் நல்ல எண்ணம் உள்ளவர் எனக் கொள்வோம். நம் மனதில் concentrate செய்வதற்குப் பதிலாக அவர் மனதில் வர ஆரம்பிப்பார். நம்முள் எப்படி அன்னையைப் பிரதிஷ்டை செய்தோமோ, அப்படியே மற்றவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்யலாம். "நான் உங்கள் நெஞ்சில் எல்லாம் குடி இருக்கிறேன்'' என அன்னை ஆசிரமவாசி ஒருவரிடம் சொல்லியது இதைத்தான். நம்முள்ளும், நம்மவர் மனதிலும், நம் வீட்டிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவருடைய வாழ்க்கை புனிதம் நிறைந்ததாகவும், புதுமை உள்ளதாகவும் இருக்கும்.

                        ---------------------------------

- தொடரும் ...

Savitri - 252


Daily Savitri - 252

Sri Aurobindo's Savitri

Earth's winged chimaeras are Truth's steeds in Heaven,
The impossible God's sign of things to be.
But few can look beyond the present state
Or overleap this matted hedge of sense.
All that transpires on earth and all beyond
Are parts of an illimitable plan
The One keeps in his heart and knows alone.


- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 52

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.


- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, March 25, 2013

Audio - Tamil :அன்னையிடம் வந்தபின் நாம் அறியக் கூடியது என்ன?

Audio : Tamil : Book Reading Program - Mar 24, 2013


(Book Reading Program -March 24, 2013) -10 mins.

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)


Player 1



Topic:

அன்னையிடம்  வந்தபின் நாம் அறியக் கூடியது என்ன?

 Highlights:

அன்னையிடம் வந்தபின்,

- குணப்படுத்த முடியாத நோய் இல்லை.
- தீர்க்க முடியாத பிரச்சனை இல்லை.
- நாம் விரும்பி சாதிக்க முடியாதது இல்லை.


  • சுவர்க்கம் பூலோகத்தில் இருக்கிறது.
  • உடல் தன்னைத்  தானே குணப்படுத்திக் கொள்ளவல்லது.
  • வாழ்வில், சோகம் என்ற ஒன்று இல்லை.
  • அபிப்பிராயம் அறிவுக்குத் தடை.
  • அறிவியல் என்பது அறியாமையின் ஓர் அழகான உருவம்.
  • கடவுள்களால் முடியாதவற்றை மனிதனால் செய்ய முடியும்.
  • மனிதன் கர்மத்தாலும் காலத்தாலும் கட்டுண்டவன் இல்லை.
  • மனிதனால் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும்.


Book: வேணுகானம்
By Sri. Karmayogi Avl.


Next Book Reading Program : 

 -  Mar 31, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 



Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil :அன்னையிடம் வந்தபின் நாம் அறியக் கூடியது என்ன?

Savitri - 251

Daily Savitri - 251

Sri Aurobindo's Savitri

A Joy that drags not sorrow as its shade.
For these she yearns and feels them destined hers:
Heaven's privilege she claims as her own right.
Just is her claim the all-witnessing Gods approve,
Clear in a greater light than reason owns:
Our intuitions are its title-deeds;
Our souls accept what our blind thoughts refuse.


- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 52

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.


- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, March 22, 2013

Savitri - 250


Daily Savitri - 250

Sri Aurobindo's Savitri
Outstretching arms to the unconscious Void,

Passionate she prays to invisible forms of Gods
Soliciting from dumb Fate and toiling Time
What most she needs, what most exceeds her scope,
A Mind unvisited by illusion's gleams,
A Will expressive of soul's deity,
A Strength not forced to stumble by its speed,




- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 51

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.


- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, March 21, 2013

Audio : Tamil : அன்னையின் வழியில் சாதிக்க உதவும் நான்கு முறைகள்


Audio : Tamil : அன்னையின் வழியில் சாதிக்க உதவும் நான்கு முறைகள் பற்றி திரு. அசோகன் அவர்கள் 
(Webex Conference Speech presented by Sri. Ashokan, MSS, Pondicherry)

Topics :

அன்னையின் வழியில் சாதிப்பது எப்படி?

பிரார்த்தனை எவ்வாறு செய்ய வேண்டும்?

சரணாகதி மற்றும் சமர்ப்பணம் என்பது என்ன?

மனோபாவத்தை மாறுவதன் மூலம் 
அன்னையின் அருளைப் பெறுவது எப்படி?

Value -களை ஏற்பதன் மூலம் அன்னையின் அருளைப் பெறுதல் - வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் முறைகள் 


Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)


Player 1


Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio: Tamil : அன்னையின் வழியில் சாதிக்க உதவும் நான்கு முறைகள் 

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழி முறைகள் -3


ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிபாட்டு / தியான / வழி முறைகள் -3 

(From the Book : அருளமுதம்.

- திரு. கர்மயோகி அவர்கள்

மாதக் காணிக்கை (Prosperity Offerings):


நம் மரபில் ஏற்பட்ட ஒரு முக்கியமான பழக்கம் தெய்வத்தை வழிபடும் பக்தன் தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் தன் வழிபாட்டில் ஈடுபடுத்துகிறான். வழிபாடு முழுமையாகவேண்டி வாயால் துதி பாடி, மனத்தால் பக்தி செலுத்தி, உடலால் உழவாரப்படை பணி போன்ற உழைப்பை நல்கி, தன் கரணங்கள் அனைத்தையும் வழிபாட்டில் பக்தன் ஈடுபடுத்துகிறான். மனத்தால் எவரும் பக்தி செலுத்த முடியும். வாயால் எல்லோராலும் துதி பாட முடியும். ஆனால் கோயிலுக்குப் போகின்ற எல்லோராலும் உடலால் உழைப்பை நல்க வாய்ப்பிருப்பதில்லை. இது சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட விளைவு.

ஜீவனால் மலர்ந்து தெய்வத்தைத் தன்னுள் அழைப்பது சிறந்தது. அது முடியாதவர்கள் மனதால் தெய்வ நாமத்தை உச்சரிக்கின்றார்கள். அதுவும் முடியாதவர்கள் வாயால் நாம ஜெபம் செய்கிறார்கள். உடலால் தெய்வத்திற்குப் பணி செய்தால்தான் உடலின் பங்கு பூர்த்தியாகும். இதைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பின் பலனைத் தெய்வத்திற்குச் சமர்ப்பித்தால், உழைப்பால் வந்த ஊதியத்தைச் சமர்ப்பணம் செய்தால், உடலால் தெய்வ வழிபாடு செய்ததற்குச் சமமாகும். இதுவே காணிக்கை செலுத்துவதன் ஆன்மிக அடிப்படை.


எந்தக் கரணத்தால் இறைவனைப் பூஜிக்கின்றோமோ, அந்தக் கரணம் அருளால் நிரம்பி வழிகிறது. ஸ்தோத்திரம் பாடி வழிபட்டால், மனம் இறைவனது அருளால் தெளிந்து, விசாலமாகி, புத்தி கூர்மை ஏற்படும். பக்தியால் பரவசப்பட்டால், மன வியாகூலங்கள் விலகி, உள்ளம் பூரித்து, சந்தோஷத்தால் நிறைகிறது. ஒரு கரணத்தால் செய்யும் தொண்டிற்கு மற்றொரு கரணத்தை நிரப்பும் திறன் இல்லை. ஆங்கிலத்தில் அதிகத் திறமையுள்ள மாணவனுக்கு கணிதத்தில் அதனால் மார்க் வாராது. கணிதத்தில் அவன் வாங்கிய 12 மார்க் 42ஆக வேண்டுமானால், 
அவன் தன் நேரத்தைக் கணிதப் பயிற்சியில் செலவிட வேண்டும். கணிதத்தில் மார்க் குறைவாக இருப்பதால், ஆங்கிலப் புத்தகங்களை அனுதினம் படித்தால், அது கணிதத்திற்குப் பயன்படாது.

பொருள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. பொருளை ஈட்டுவது உடலும், அதன் உழைப்பும். பக்தன் தன் வருமானம் பெருக வேண்டுமென அன்னையிடம் பிரார்த்தனை செய்தால், அவன் அன்னைக்கு உடலால் சேவை செய்ய வேண்டும். அதுவே அவனுக்கு நேரிடையாக உதவுவது. அதற்கு நேரிடையாக உதவ, அவனது உடலால் அன்னைக்குச் செய்யும் சேவை. இந்தச் சேவையின் உட்கருத்தை அறிந்து, தான் செய்யும் சேவை அன்னைக்குச் சேரும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி என்பதை "சேவை'' என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. நேரடியாக ஆசிரமம் வந்து சேவை செய்வதும் எல்லோராலும் செய்யக்கூடியதில்லை. அன்னையின் பிரதாபங்களைச் சொல்லும் புத்தகங்களை ஏராளமாக விற்று, அதனால் தனக்கிருந்த ஏழரை நாட்டுச் சனியனின் தரித்திரத்தைப் போக்கி, அபரிமிதமாக வளம் பெற்றவர்கள் பலருண்டு. அதுவும் எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எதுவும் முடியாதவர்களுக்கு உகந்தது காணிக்கை. இதன் சிறப்பை விளக்க ஒன்றைக் குறிப்பிட்டால் போதும். ஆசிரம டிபார்ட்மெண்ட்களில் புதிய வேலை ஆரம்பிக்கும்பொழுது அன்னைக்குக் காணிக்கை செய்வது உண்டு.

ஜனவரி முதல் தேதியை வருஷத்திற்கு (prosperity day) சுபிட்ச தினம் என அன்னை கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஆசிரம சாதகர்கட்கு அன்னை அவர்களுடைய தேவையை தாமே வழங்கி, தரிசனம் கொடுத்து, அனுக்கிரஹம் செய்ததுண்டு. அதனால் ஆசிரமத்தில் மாதம் முதல் தேதிக்கு சுபிட்ச தினம் (prosperity day) எனப் பெயர். இதெல்லாம் கருதியே அன்பர்கள் தங்கள் மாத வருவாயில் ஒரு பகுதியை அன்னைக்கு முதல் தேதியன்று அனுப்பி வைப்பது வழக்கம். 


ஓர் அன்பர் வேலை செய்த ஸ்தாபனத்தில் சம்பளத்தை 7 முதல் 10 தேதிவரையில் ஒரு பகுதியையும், 15 முதல் 20 தேதியில் அடுத்த பகுதியையும் கொடுப்பது நீண்ட கால வழக்கமாக இருந்தது. அங்கிருந்து ஆசிரமத்திற்கு ஓர் அன்பர் வர ஆரம்பித்தார். தம் ஊதியத்தில் ரூ.10ஐ காணிக்கையாக அனுப்பினார். அதே மாதம் ஸ்பதானத்தின் தலைவர் மாறினார். அவர் செய்த முதல் வேலை சம்பளம் சம்பந்தமானது. "சம்பளத்தைத் தாமதப்படுத்திக் கொடுப்பது சரியில்லை. இந்த மாதத்திலிருந்து சம்பளத்தை முழுவதுமாக முதல் தேதி மாலை கொடுத்துவிட வேண்டும்'' என்று கூறி, அதை நிறைவேற்றினார். அன்பர் சில மாதங்களுக்குப் பின் தம் காணிக்கையை ரூ.20ஆகச் செய்தார். அதே மாதம் சர்க்கார் புதிய சட்டம் போட்டு, அது போன்ற ஸ்தாபனங்களுக்கு சர்க்காரே நேரடியாகச் சம்பளம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அன்பருக்கு ஒரு மாதமாவது தம் முழு ஊதியத்தையும் அன்னைக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்று ஆவல். ஓராண்டு கழிந்து அது முடிவு பெற்றது. தம் 188.75 சம்பளத்தைக் காணிக்கையாக அந்த டிசம்பரில் செலுத்தினார். அடுத்த டிசம்பரில் அவர் தினமும் ரூ.188.75 செலவு செய்யும் ஸ்தாபனத்தின் தலைவராகி, தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். 3 ஆண்டுகளுக்குப் பின் அவரது குடும்பத்தில் தினமும் ரூ.188.75 செலவாகும் நிலைக்குப் போய்விட்டார்.


மாதக் காணிக்கையாக 1 நாள் ஊதியம் கொடுப்பவருண்டு. வருஷத்தில் மொத்தக் காணிக்கை 1 மாத ஊதியமாக இருக்கும்படிக் கொடுப்பவருமுண்டு. காணிக்கை அவசியம். ஆனால் அதற்கு அளவு இல்லை. நம் பிரார்த்தனை பூர்த்தியாக காணிக்கை எந்தத் தொகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தபட்சத் தொகைக்கும் செய்த பிரார்த்தனை பலிக்கும். ஒருவர் அதிகமான காணிக்கை செலுத்தினால் அது சேவையாக மாறிவிடும். வியாதி உள்ள ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் சமாதியை தரிசனம் செய்துவிட்டு,

ஸ்ரீ அரவிந்தர் அறைக்குப் போனார். காணிக்கை செலுத்த நினைத்தார். அவர் எந்தக் காணிக்கை - ரூ.5 அல்லது ரூ.10 - செலுத்தினாலும் வியாதி குணமாகும். அவர் செல்வர். காணிக்கை வேண்டித் திரும்பினார். அருகிலிருந்தவர் எதுவும் புரியாமல் பல ரூ.100 நோட்டுக்கட்டுகளைக் கொடுத்தார். எல்லாவற்றையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். 8ஆம் நாள் வியாதி குணம் ஆயிற்று. அத்துடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் புதிய நிலைமை ஏற்பட்டது. கனவிலும் கருதாத ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்தது. அவருடைய மாநிலத்தில் அவரை முதன் மந்திரியாக ஆக்க வேண்டுமென்று அநேகர் விரும்பினர். அவருக்குப் புரியவில்லை. அதுவும் நடந்தது. காணிக்கை செலுத்தும் நேரத்தில் பக்தியால் உந்தப்பட்டு பெருந்தொகைகளைச் செலுத்துபவர்களுக்குப் பெரிய விஷயங்கள் நடப்பதுண்டு.

மாதம்தோறும் காணிக்கை செலுத்துவதை மட்டும் நோன்பாக ஏற்றுக்கொள்ளும் அன்பர் அதன் மூலம் முழுப் பலன் பெற செய்யக் கூடியவை என்ன?

முதல் கருத்து, காணிக்கைக்கு ஜீவனுண்டு என்பதை அறிந்து நாம் செலுத்தும் காணிக்கைக்கு ஜீவன் ஏற்படும் வகையில் அதைச் செலுத்தி, அந்த ஜீவனுடன் நாம் நித்தியத் தொடர்பு கொள்ள வேண்டும். அதை நிறைவேற்ற காணிக்கை ஒரு கடமை என்று செய்யாமல், ஜீவனுள்ள குழந்தையை வளர்ப்பது போன்ற உணர்வுடன் அதில் ஈடுபடவேண்டும்.


காணிக்கை என்பது நம் உடல் உழைப்பின் பக்தியை அன்னைக்குச் செலுத்துகிறது என உணர்ந்து, நம் உழைப்பை அன்னையின் சேவையாக, பொதுவாகக் கருத வேண்டும்.


காணிக்கையின் அளவை நம் சந்தர்ப்பத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். அளவு இரண்டாம்பட்சம். நிர்ணயித்தபின் அதைக் குறைக்கக்கூடாது.


மாதம் வருமானம் வந்தவுடன், முதல் செலவு காணிக்கையாக இருக்க வேண்டும்.


காணிக்கை அனுப்பும்பொழுது அது சம்பந்தமான வேலைகளை, M.O. அனுப்புவது, செக் (cheque) எழுதுவது, தபாலில் சேர்ப்பது போன்றவற்றை நாமே நேரில் செய்ய வேண்டும்.


மனம் காணிக்கையைப் பவித்ரமாகக் கருத வேண்டும். பணமாகக் கருதக்கூடாது.


காணிக்கை சம்பந்தப்பட்ட வேலைகளைச் சமர்ப்பணம் செய்ய முடிந்தால் சிறப்பு. நாம் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்தால், காணிக்கை நேரத்தில் உரிய இடத்திற்குச் சென்று, மறு தபாலில் பிரசாதம் வரும். 


காணிக்கையின் பூரணத்தையும், பவித்திரத்தையும், பிரசாதம் வரும் வேகத்தில் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக M.O. அனுப்பும்பொழுது நாம் புதிய நோட்டுக்களைப் போஸ்டாபீஸில் கொடுத்தால், அவை நேரடியாக ஆசிரமத்திற்குச் செல்லாது என்று நமக்குத் தெரியும். ஆனால், நாம் கொடுக்கும் மனப்பான்மையே முக்கியம். 


காணிக்கையாக அனுப்பும் பணம் நம் மாத வருமானத்திருந்து வந்த அதே பணமாக இருப்பது நல்லது. M.O. மூலமாகவும், செக் (cheque) மூலமாகவும் அதே ரூபாய் நோட்டு போகாது என்றாலும், நாம் செய்வது நம்மைப் பொருத்தவரை நமக்குகந்தவையாகச் செய்துவிடுவது நல்லது. 


நம் ஸ்தாபனத்தில் சம்பளம் பல தேதிகளில் கொடுக்கலாம். நம்மைப் பொருத்தவரை நம் கைக்குச் சம்பளம் வந்தவுடன் முதல் காரியமாகக் காணிக்கையை அனுப்பிவிட்டால் போதும். ரூ.2000 சம்பளம் வாங்கிய ஒருவர் 1978இல் ரூ.200 காணிக்கையாக அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வேலையை விட்டு பயிற்சிக்காக ரூ.1000 சம்பளத்தில் அமர்ந்தார். ஏனோ அவர் காணிக்கையைக் குறைக்கவில்லை. தொடர்ந்து ரூ.200 அனுப்பினார். 1 வருஷம் என நினைத்த பயிற்சி 3 வருஷமாயிற்று. பல நல்ல காரியங்கள் நடந்தன. பெரிய இக்கட்டுகள் ஏற்பட்டன. 
1978 முதல் 1988 வரை அவர் 5 இடங்கள் மாறினார். மூன்று வேறு தொழில்களில் இருந்தார். பயிற்சி ஓர் இடத்தில், சம்பள வேலை மற்றோர் இடத்தில், கூட்டாளியாக வேறோர் இடத்தில் என பல நிலைகளில் அவர் இருந்தபொழுது பணம் அருமையானதாக மாறிய நேரங்கள் பல உண்டு. காணிக்கையின் அளவை அவர் இந்த எல்லா நிலைகளிலும் குறைக்கவில்லை. இன்று 2 கோடி ரூபாய் நிறுவனத்தில் தலைவராகவும், முக்கிய பங்குதாரராகவும் விளங்குகிறார். அதுவே காணிக்கையின் மகத்துவம்.



                                ----------------------------------
        
நினைவே வழிபாடு - இடையறாத அன்னை நினைவு:

பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் சுமார் 30 ஆண்டு காலம் உடன் உறைந்து அவருக்குப் பணி செய்தவர் ஒரு சாதகர். ஒரு சமயம் பகவானை அவர் தமக்கு ஏதாவது சொல்லும்படிக் கேட்க, பகவான் "இரவும், பகலும், எப்பொழுதும், தவறாது, இடைவிடாது, பிழை இல்லாமல் இறைவன் நினைவு வேண்டும் என்று பிரார்த்தனை செய்'' என்றார். அதுவே இந்த முறை. பொதுவாகப் பார்க்கப் போனால் இது மிக எளிய முறை. எவரும் பின்பற்றலாம். அதன் முழுமையைக் கவனித்தால், இம்முறைக்குச் சிறப்புண்டு என்று தெரிகிறது.

எந்தச் செயலைச் செய்தாலும் - இறைவனை - அன்னையை நினைத்துச் செய்கிறோம். எந்தச் செயலைச் செய்யவில்லை என்றாலும், அன்னையை நினைவுகூர்கிறோம். எந்த எண்ணம் தோன்றினாலும் அன்னையை நினைத்தபின் எண்ணத்தைத் தொடர்கிறோம். எந்த உணர்ச்சி தோன்றினாலும் அன்னையை முதலில் நினைக்கிறோம். அதனால் இடையறாத நினைவு ஒரு தெய்வீகப் பூரணத்தைக் கொடுக்கிறது. ஆகவே அன்னை நம் வாழ்வில் பூரணமாகச் செயல்படமுடிகிறது. வாழ்வின் அஸ்திவாரங்கள் மாறுகின்றன. அவற்றின் தன்மை மாறுகிறது. தரம் மாறுகிறது. திறன் மாறுகின்றது. வழிபாட்டின் சிறப்பு மெல்ல, மெல்ல வாழ்வு முழுவதும் பரவி, அன்னையின் ஆதிக்கத்துள் நம்மைக் கொண்டு வந்துவிடுகிறது.

இடையறாத அன்னை நினைவு என்றால் என்ன ?:


  • வாயால் ஒரே ஒரு வார்த்தையும் பேசுதல் கூடாது.

  • எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனதைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.

  • உடல் அசையும்பொழுது, அசையுமிடத்தில் அன்னையைக் காணுதல் அவசியம்.

  • எந்தப் பொருளைத் தொடுமுன்னும் அதன் மீது அன்னையின் உருவத்தைக் காண வேண்டும்.

  • கண்ணில் படும் காட்சிகள் மனதைத் தீண்டும் முன் அன்னையின் உருவம் மனதைத் தொட வேண்டும்.

  • ஓர் எண்ணம் தோன்றினால், அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.

  • எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி மனதில் பளிச்சிட வேண்டும்.

  • ஒரு கவலை மனதில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

  • ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதை விட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.

  • ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

  • நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

  • நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும், நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

  • யார் நினைவுக்கு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற முயல வேண்டும்.

  • ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்யிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.

  • பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.

  • ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றையெல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக, அன்னை நினைவு சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என அறிய வேண்டும்.

  • குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்படாமல், நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை, நம்பிக்கை வளரும் வகையில் கொண்டு வர வேண்டும்.

  • யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

  • கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

  • எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.
  • உடல் அசையும்பொழுது அசையுமிடத்தில் அன்னையைக் காணுவது அவசியம்.

  • எந்தப் பொருளைத் தொட்டாலும், தொடுமுன் அதன்மீது அன்னையின் திருவுருவத்தைக் காண வேண்டும்.

  • கண்ணில் கண்ட காட்சிகள் மனத்தைத் தொடுமுன் அன்னையின் உருவம் மனத்தைத் தொட வேண்டும்.

  • யார் நினைவு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

  • ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றை எல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக அன்னை நினைவு, சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்பவேண்டும் என அறியவேண்டும்.
                       ------------------------------------

சுத்தம்:



சுத்தம், புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது. அதை நான் இங்கு எடுத்து விளக்கவில்லை. புறத் தூய்மையை மட்டுமே குறிப்பிடுகிறேன். அதற்குரிய சிறப்பை விளக்கவே இப்பகுதியில் முயல்கிறேன். (purity of atmosphere) வீட்டுச் சூழல் தூய்மை என்றும் ஒன்றுண்டு. அன்னையின் திருவுருவப்படம் அந்தத் தூய்மையை வளர்க்கும். தெய்வச்சிலை, படங்கள் அதை வளர்க்கும். குட்டிச்சாத்தானை வணங்கினால், சித்து விளையாடுபவர்களுடன் தொடர்புகொண்டால் அந்தத் தூய்மை கெட்டு, இருளின் சூழல் ஏற்படும். பிறருக்குத் தீங்கு செய்யும் மந்திரப் பிரயோகங்கள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள், படங்கள் வீட்டிருந்தால், அன்னையின் திருவருள் அங்கு செயல்படாது. அப்படியே செயல்பட்டாலும் மிகக்குறைந்த பலனையே தரும்.



வீட்டில் புறத் தூய்மை என்றால் என்ன? என்பது எளிமையான கேள்வியாகத் தோன்றுகிறது. அன்னையின் சக்தி (Mother's Force) (supramental Force) சத்தியஜீவிய சக்தியாகும். அது ஓர் இடத்தில் வர, வந்து நிரந்தரமாகத் தங்க, புறத் தூய்மை (physical cleanliness) அத்தியாவசியம். இது எவ்வளவு முக்கியமானது, கடினமானது என்பதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். ரூ.25 இலட்சம் செலாவணியுள்ள கம்பெனி முதலாளியின் மனைவி கல்லூரிப் பேராசிரியர். அவர்களுடைய வீட்டில் முக்கிய விருந்து நடந்த அன்று உள்ளே நுழைந்தவுடன் நமக்கு அறிமுகமானது "அழுக்கு வாடை''. வீட்டில் பல நாட்களாகச் சேர்ந்துள்ள தூசி, அழுக்கு,அழுக்குத் துணிக்குவியல், இவை எல்லாவற்றையும் மறைத்து வைத்தாலும் தாங்கள் இருப்பதை அறிவிக்க அவை வாடை மூலம் நம்மை வந்து அடைகின்றன.


கையை வைத்த இடங்கள் தூசியில்லாமல் இருப்பது என்பது எத்தனை வீடுகளில் இருக்க முடியும்? நம் வீட்டிற்கு அந்தத் தகுதி உண்டா? சுவரில் மாட்டியுள்ள படங்களைத் தொட்டுப் பார்த்தால், விரலால் கோடிட்டுப் பார்த்தால், நாம் எத்தனை நாளைக்கு ஒரு முறை அந்த படங்களைச் சுத்தம் செய்கிறோம் என்பது நினைவுக்கு வரும்.


"குடித்தனம் செய்யும் பெண்ணின் சுத்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அலமாரிக்கு அடியில் பார்த்தால் தெரியும்'' என்பார்கள். நாம் தினமும் குளிக்கின்றோம். சிலர் தலையில் தினமும் தண்ணீர் விட்டுக் கொள்வார்கள். தலைமுடி நீளமாக இருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்கள் தினமும் தலையை நனைப்பதில்லை. வங்காளத்தில் அந்தப் பழக்கம் உண்டு. தலையை தினமும் நீராட்டாவிட்டால் தலையில் அழுக்கு சேர்வது இயல்பு. வீட்டைப் பெருக்குகிறோம். ஆனால் வீட்டில் உள்ள மேஜை, நாற்காகளைத் தட்டுகிறோம். அவற்றில் உள்ள தூசி நாம் பயன்படுத்துவதால் அகற்றப்படுகிறது. தினமும் மேஜை, நாற்காலி, படம், அலமாரி, இவற்றை நாம் சுத்தம் செய்வதில்லை. அதிகக் குப்பை சேர்ந்தால் சுத்தம் செய்கிறோம். படங்களுக்குப் பின்புறம், சோபா சீட்டிற்கு அடியில், அலமாரிக்குப் பின்புறம் ஒட்டடை சேரும். எண்ணெய் பொருள்கள் உபயோகிக்கப்படுவதால், பெஞ்சு, ஸ்டூல், முதயவற்றில் அழுக்கு படை படையாக ஒட்டிக்கொண்டு இருக்கும். சமையல் அறை ஆசாரமானவர்கள் வீடுகளில் சுத்தமாக இருக்கும். மற்ற வீடுகளில் சுத்தமாக இருக்காது. (store foom) சாமான்கள் அறை ஒரு வீட்டில் சுத்தமாக இருந்தால், அதை மிகச் சுத்தமான வீடாக நாம் கருதலாம். ஜன்னல், கதவு, மேஜைக்கு அடிப்புறம் முதல் ஆரம்பித்து ஸ்டோர் அறை வரை எல்லா இடங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் அவசியத்தை நாம் உணர வேண்டும். உணர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சினை. ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, மற்ற காரியங்களை நிறைவேற்றியபின், இந்த அளவு வீட்டில் தூய்மையை நிலைநிறுத்த முடியுமா என்பது கேள்வி. என்னுடைய பதிலுக்கு இரு பகுதிகள் உண்டு. 1. இந்த அளவு தூய்மையை நம் இன்றைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிறைவேற்றுவது இயலாத காரியம். 2. தூய்மையை நாம் அன்னையின் வழிபாடாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டால், நம் அத்தியாவசியமான வேலைகள் எதற்கும் குந்தகமின்றி நிறைவேறும். அத்துடன் நம் அத்தியாவசியமான வேலைகள் சிறப்புறும். என் இரு பதில்கள் முரணானவைபோல் தோன்றுகின்றன. முரண்பாட்டை நீக்கி, விளக்கம் கொடுக்கிறேன்.


பொதுவாக நாம் ஆபீஸ், குடும்ப வேலைகள் முடிந்தபிறகு, முக்கியமாக நேரத்தைச் செலவிடுவது எதில் என்று பார்த்தால், சினிமா, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது, விசேஷங்களுக்குச் சென்று அதிகபட்ச நேரத்தைச் செலவிடுவது, சாரமில்லாத பத்திரிகைகளைப் படிப்பது, அக்கம் பக்கத்துச் செய்திகளை அத்தியாவசியமாகச் சேர்ப்பது என்பன போன்ற செயல்களில் என்று தெரியும்.


மாறாக, பரீட்சைக்குப் படிக்கும்பொழுது, வீடு மாற்றும் பொழுது, திருமணம் ஏற்பாடு செய்யும்பொழுது, எப்படி அவற்றிற்கு முக்கிய முதலிடம் கொடுத்து, பின்னரே அன்றாட வேலைகளை இரண்டாம்பட்சமாகச் செய்கிறோமோ, அதுபோல், "வீட்டின் சுத்தம் அன்னை வழிபாடு'' எனக் கொண்டு, அதற்கு முதலிடம் கொடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு வேலை செய்வதைப் போல் வேலை செய்து, சுத்தத்தை முழுத் திருப்தியுடன் பூர்த்தி செய்த பிறகு கவனித்தால், ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, அத்தியாவசியமான கடமைகள் எதுவும் தடைபடவில்லை என்று தெரியும். சுத்தத்தைத் தலையாய காரியமாக மேற்கொண்டு நிலைநிறுத்தியபின் நேரமில்லை என்பது வம்பளப்பதற்கு, ஊர் சுற்றுவதற்கு, சினிமா பார்ப்பதற்குத்தானே அன்றி, அவசியமான கடமைகளுக்கு நேரமில்லாமல் இல்லை என்பது தெரியவரும். இந்த முறையின் ரகஸ்யமே அதுதான். வீணான காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருக்க முடிவு செய்தால்தான் சுத்தத்தைத் திருப்தியாக நிறைவேற்ற முடியும்.

அப்படிப்பட்ட சுத்தம் அன்னைக்குச் சிறந்த வழிபாடு. அந்த வழிபாடு ஒன்றே வாழ்க்கைச் சிறப்பைத் தேடித் தரும்.




                          --------------------------------


- தொடரும் ...

Followers